+++எனது உயிரே அம்மா+++
தனிமையில்
நடக்கிறேன் வெகு
தூரம் அருகாமையில்
என்றுமே எனது
அம்மா.............!
தாயின் மடியிலே
தவழ்ந்தேன்
தாலாட்டு
ராகம் எனது செவிகளை
பதம் பார்த்தது
குழந்தை
பருவத்தில்...........!
எனக்கு ஒன்று
நேர்ந்தால் அழுதிடுவாள்
பரிதவிப்பால்
எனக்காக............!
தாய்க்குப்
பின் தாரமா ? இல்லை
என்றுமே
எனது மனதென்னும்
சொர்க்கத்திலே
அம்மா
மட்டும்.........!
செல்வத்தை
கண்டு
ஆசைக்கொள்வதில்லை
செல்வமே நீ சுகமா
என என்னை
கேட்டிடுவாள்
என் அன்னை................!
அன்பெனும்
பாசத்தை
நேசத்தோடு அமுதாக
கொடுத்தவளே எனது
உயிரே அம்மா.........!