முதிர்கன்னி
மலர்ந்தேன் பருவத்திலே ...
நல்லதொரு மனதாய்..!
வாசமாய் கனவிருந்தும்...
வாய்க்கலியே என் வாழ்கையிலே...!
கண்டகனவு மெய்த்திருந்தால்..
மலர்சூடி மகிழ்ந்திருப்பேன்..!
பொய்க்கும் கனவாய்
வாழ்விருக்க பொறுக்கலியே...
பெண்மனது...!
முதிர்கன்னி மனதிலே
திருமண பூ..
தீராத மனதவிப்பு..!!
....கவிபாரதி..