காதலனாய் நான்
காணும் யாவிலும் நீ...
காட்சிபிழையாகவேனும்
உன்னை தேடும் எனை அறிந்த
என் கண்கள் - பார்
உன் மகிழ்ச்சி
என்னுள் மழை ஆகிறது
உன் கண்ணீர்
என்னுள் குளமாகிறது
உன் மொழிகள்
என்னுள் கவிதை ஆகிறது
உன் வலிகள்
என்னுள் வடுக்கலாகிறது - ஆம்
பார்வையாளனாய் நானில்லை
பங்கெடுதுக்கொண்டேன் - உன்
காதலில், காதலனாய்....
புரிகிறதா உனக்கு?
கண்மூடும் நேரத்திலும்
கணநேரம் அகலவில்லை
கனவாகவேனும் படர்கிறது - உன்
நினைவுக்கொடிகள்
என் மீது...