காதலா கல்யாணமா
கல்யாணம்!
காதல் முடியாதவர்க்கு கல்யாணம் தேவை தான்!மனங்கள் சங்கமிக்க ஓர் மணக் கோல மாங்கல்ய பூட்டு!
பண்பாடு! பணம் படும் பாடு!
செல்வ சீர் கேடு!
கல்யாணம் !
துணைகளை இணைக்கும் ஓர் பாச பஞ்சாயத்து!
ஜாதி மதங்களின் மேளதாளம்!
சமய காவலர்களின் சங்கீர்த்தனம்!
காதல்!
காதல் ஓர் கண்ணாமூச்சி? இது விளங்கா விட்டில் பூச்சிகளுக்கு!
ஆனால் காதல் மணம் ஓர் இனங்காணா பினைப்பு! இல்வாழ்வின் சிறப்பு!
ஆதலால்!
காசை கரியாக்கும் கல்யாணம் தவிர்த்து
கருத்தால் இணையும் காதலை போற்றுவோம்!