சில சமயம்
தொலைந்து போன
காகிதங்கள்
மீண்டும் கிடைத்தது போல்
மகிழ்ச்சி!
மனசு வெட்கப் படாமல்
சில சமயம்
தனக்குத் தானே
குளித்து கொள்ளும்..
ரகசியமாய்க் கனவை
அடைகாத்து வைத்து
குஞ்சு பொறிப்பது போல்
சில துளி நிகழ்வுகள்..
தங்காது எனத் தெரிந்தும்
தென்றலை சுகிக்கும் மனம்..
எதைக்
கட்டிப் போட முடியும்..
கட்டுப்படுகிறவை
தானாய் விரும்பாமல்…!