பூக்கள் சூடும் லோஜி இளவரசி

இனிமை விழுங்கிய பறவையைப் போல
எங்கிருந்தோ எழும் நீ
என்னில் வந்து தரையிறங்கினாய்
மூச்சற்ற அலைகளின் கரைகளில்
பொரிந்த நுரைகளில்
நனைந்த கால்களில் கவிதை மிதக்கிறது
முடி சூடிய கனகாம்பரப் பூ
கருத்த ஒட்டுப் பொட்டு
மயில் தோகை பாவாடை
வாழ்வை அலங்கரிக்கும் சிரிப்பென
அற்புதமான தருணத்தை திசைகளில் தேட
உறைந்த பூமியில் தீப்பிடித்துக் கொள்கின்றன
கையாலாகத்தனத்தில் நீள நினைவுகள்
லோஜி!
பிரிவுகள் வளைந்தோடும் இந்த பூமியில்
கடலை முத்தமிடும்
உன் கோபத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன்
நசிந்த ஆயிரம் கனாக்களோடு.

மகாகவி இதழில் வெளிவந்த எனது கவிதை

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (24-Apr-14, 12:56 pm)
பார்வை : 209

மேலே