விதியின் விளையாட்டு26

ஷிவானியின் வீடு மிகவும் அழகாய் காட்சியளித்தது மண்டபத்துக்கு செல்ல அனைவரும் ஆயத்தமானர்கள் அனைவரின் முகமும் பரவசத்தில் இருக்க ஷிவானியின் அத்தை குடும்பம் மிகவும் சோர்வாக இருக்க பலரும் என்னவென்று கேட்டனர்??? ஆனால் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை..........


இந்த செய்தி ஷிவானியின் அப்பாவின் காதிற்கு எட்டியது அவர் தன் தங்கையிடம் வந்து என்னம்மா! கவலையுடன் இருக்கிறாய் ஏதாவது பிரச்சனையா?எதுனாலும் அண்ணனிடம் சொல் என்று விசாரித்தார்???

இல்லை அண்ணா!என்று சொல்லிவிட்டு நகர முயன்றாள்.

அதற்குள் அங்கு வந்த அவளின் கணவன் அது ஒன்றுமில்லை அத்தான் அவளுக்கு தன் அண்ணனின் வீட்டிலிருந்து பெண் எடுக்க வேண்டுமென்று ஆசை அது நடக்கவில்லை என்று அந்த கவலையில் இருக்கிறாள் என்று சொன்னார்........!

ஐயோ இதுதானா!உன் பிரச்சனை??ஷிவானி திருமணம் முடிந்தது உன் மகன் சந்துருவுக்கும் ரிஷானிக்கும் பேசி முடிச்சிருவோம் என்றார்.

அப்புறம் என்ன உம்முன்னு சிரி என்று தங்கையிடம் சொல்லி ரிஷானி திருமணத்தையும் பேசலாம் என்று ஒரு முடிவுடன் சொல்லிவிட்டு கல்யாண வேலைகளை கவனிக்க சென்று விட்டார்.........

அப்புறம் என்ன! சந்துரு வச்ச கண் வாங்காமல் ரிஷானியையே பார்த்துக்கொண்டிருந்தான்,

ரிஷானி அவனை கண்டுகொள்வதாயில்லை அவன் மனதிற்குள்"என்ன ஒரு அழகு இருந்தும் திமிர் பிடித்தவள் போல் செல்கிறாள் ஒரு பார்வை பார்த்தால் என்ன ஷிவானி திருமணம் முடியட்டும் உன்னை கவனிச்சிக்கிறேன்"என்று மனதிற்குள் பேசியவன் புன்சிரிப்புடன் அவளை நோக்கிக்கிகொண்டிருந்தான்........!


ரிஷானியின் தந்தை தங்கையிடம் பேசிய விஷயம் அவர்கள் வீட்டில் யாருக்குமே தெரியாது?????????

திருமணவீட்டிற்கு வந்தவர்கள் மண்டபத்திற்கு கிளம்பத்தயாரானார்கள், ஷிவானி குடும்பமும் அவள் அத்தை குடும்பமும் ஒரு காரில் கிளம்பினர் மற்றவர்கள் அனைவரும் வெவ்வேறு காரிலும், வேனிலும் இவர்கள் காரை தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.......


ஷிவானியும்,ரிஷானியும் அருகருகே உட்கார்ந்திருந்தனர் அவளது தோழியும் உடன் இருந்தாள், இவர்கள் மதனை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.......

அக்கா சொல்லிட்டேன் அந்த விஷயம் உன் திருமணம் முடிந்ததும்.....நினைவிருக்கா? மறந்திராதா????என்று மதன் விஷயத்தை மறைமுகமாக பேசினாள் ரிஷானி....???....!

எதிர் இருக்கையில் அத்தை,அம்மா சந்துரு இருந்தனர் ஆனால் அவர்கள் யாரும் இவள் பேச்சை கவனிக்கவில்லை அம்மா மட்டும் என்னடி! என்ன விஷயம்? என்கிட்ட சொல்லு??என்றார்...?

முடியாது எங்களுக்குள்ள ரகசியம் என்று குறும்புத்தனமாக பேசினாள் ரிஷானி!!!

இந்த பேச்சும் என்னவோ சந்துருவை மெய்மறந்து அவளை திருமணம் செய்யும் ஆவலை தூண்டியது??????

அவன் ரிஷானியை ரசித்து பார்த்து கொண்டிருப்பதை அவளது தோழி கவனித்து ரிஷானியிடம் சொல்ல சட்டென்று அவனை பார்த்தாள் ரிஷானி உடனே சந்துரு அவன் பார்வையை விலக்கிக்கொண்டான்......

இப்படியே அவன் பார்வை தொடர்ந்துகொண்டிருக்க,,,,,

ஷிவானியின் அத்தை மெல்ல ரிஷானியின் தலையை தடவி என்னம்மா, நீ தான் என் மருமகள் என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம் என் பையனை பார்க்க வேண்டியதுதானே??அவனை புடிச்சிருக்கா???என்று கேட்டாள் அத்தை......


ரிஷானிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஓ! இதுதானா? விஷயம் இந்த
விஷயத்தை இப்படியே விட்டால் சரி ஆகாது என்று நினைத்தவள் ஷிவானியின் காதில் ஏதோ சொல்லிவிட்டு செல் போனை எடுத்து அழைப்பை கொடுத்தாள்...... ....





விதி தொடரும்.

எழுதியவர் : ப்ரியா (26-Apr-14, 12:51 pm)
பார்வை : 241

மேலே