தனிமையில் மனதில் நினைவுகள் சலனமிடும்

உந்தன் நிஜத்தின்
தருணங்கள்
யாவும் காலத்தின்
பயணத்தில்..
நினைவுகளாக மாறிடும்..!

உணர்வின்
சலனம் மேவிய
நினைவுகள் மட்டும்
உன் நிழல் போன்று..
உன்னை தொடரும்..!

மனமென்னும்
பொக்கிஷப்பெட்டிக்குள்
அரங்கேறிய உன்வாழ்க்கை
நாடகத்தை தினமொரு
ஒத்திகை பார்த்துவிடும்..
தனிமையில் உன்மனம்..!!


...கவிபாரதி...

எழுதியவர் : கவிபாரதி (26-Apr-14, 11:31 pm)
பார்வை : 86

மேலே