உன் அன்புக்கு

உலகமே நீதான் என்று
உருகவில்லை;
நாள்தோறும் நாழிதோறும்
பேசிக்கொண்டே இருக்கவில்லை;
உன்னைத்தவிர வாழ்வில்
வேறு எதுவுமே இல்லை - என
ஒருநாளும் இருந்ததில்லை;
கால்கடுக்க காத்திருந்து
மனம்கடுக்க வேதனித்து
உயிராக உனையே நினைக்கவில்லை;

இருந்தாலும் அன்பே,
நீ கொடுக்கும் ஆறுதலும்
சுயநலமற்ற உன் அன்பும்
உன்னுடைய அரவணைப்பும்
நீ தரும் நம்பிக்கையும்
ஆயுள் முழுவதும்
வேண்டும் எனக்கு!!
துணையாகவோ அல்லது துணைவனாகவோ!!

எழுதியவர் : கீதா (27-Apr-14, 12:26 am)
Tanglish : un anpukku
பார்வை : 136

மேலே