நீர்க்குமிழி
நீர்க்குமிழி
--------------
தாயின் மடியில் குழந்தை
தாலாட்டு கேட்டு தூங்குது
மலர் மேடை நடுவே
மலர் வேய்ந்த மஞ்சத்தில்
மன்னனும் மங்கையும்
ஆனந்த துயில் -தேன்நிலவு அது
ஆண்டுகள் புறண்டன
மங்கையும் இன்றில்லை
பெற்ற பிள்ளைகள் நாட்டிலில்லை
உற்றார் உறவினர் எங்கோ
காணாமல் போயினர்
பேசும் போயிற்ரு -எஞ்சியது
மூச்சு ஒன்றே
இப்போது தெளிந்தான்
உலகும் எது என்று
இப்போது அங்கு
மண மேடை இல்லை
மலர் மஞ்சம் இல்லை
ஜவ்வாது வாசம் இல்லை
மூச்சு நின்றது
யாரோ போட்ட மலர் மாலை
தூவிய மலர் இப்போது
அவன் மேலே
இதுதானட வாழ்க்கை
வெறும் நீர்க்குமிழி
-----------------------------------------------------------------