கானா உலகில் காதல்
வங்காள கடலோரம் கால் நனைக்கலாம்
வான்னு கூப்பிட்டபோ கூட தோணலை
அங்காள பரமேஸ்வரி கோயில் சுத்திவர
வான்னு தொட்டப்போ கூட நினைக்கலை
எங்கம்மா அதான் உன் அக்காகாரி என்னை
என்ன விஷயன்னு கேட்டப்போ கூட இல்லை
அங்காடி போறேன் சட்டைத்துணி வாங்கணும்
வாறியான்னு அழைச்சபோ கூட யோசிக்கலை
பங்காளி சண்டை போல எடுத்ததுகெல்லாம்
ஈசிகிட்டு இடிச்சிகிட்டு இரஞ்சப்ப கூட இல்லை
யோசிச்சு யோசிச்சு சாப்டாம தூங்காம நான்
இளைச்சு தவிக்கரனே என்னனு கேக்கலைய
கேளு மாமா காதுக்குள்ள சொல்றேன் உன்மேல காதல் வந்த நேரம் யோசிச்சு பாக்கறேன்னு...