அறிவாயா நீ
"வாகா"- கவிதைச்சொல்லி
உன்னழகை வர்ணிக்கவா ?- இல்லை
"தான்கா"-கவிதைப்பாடி
உன் செய்கையை சித்தரிக்கவா ?- இல்லை
"ரென்கா"- காவிக்கொண்டு
உன் செல்களின் அசைவுகளை
சொல்லவா ?- இல்லை
" ஹெக்கு"- கவி வடிவில் உனது
அன்பை வடிக்கவா ?- இல்லை
பதில் சொல் பெண்ணே ..?
என் கற்பனைக்கு நீயே
உயிர் கண்ணே ..!
(வாகா,தான்கா,ரென்கா,ஹெக்கு ஆகியவை ஹைக்குக்கு முந்தைய வரலாற்று கவிதைகளின் பெயர்கள் ... )