நீ தேடும் சொர்க்கம் உன்னிலிருக்கு
மண் நாணம் கொண்டிட
மழை மண்ணில்
வரும் வேளை...
கருமேகம் சூழ்ந்திட
பகல் நேரம்
இருளாகிடுமே...
வெயில் தணித்த
குளிருக்குள் தேகம்
இரண்டும் போர்வையாகிட...
மனம் கொஞ்சும்
உணர்வுக்குள் மெளனமொழி
தித்திப்பாகிடுமே...
தனிமை மீளாத
இளமை நரகம் கண்ட
மனதும் இங்கு...
காதல் கொண்டு கற்பின்
தாகம் தணித்து
சொர்க்கம் கண்டிடுமே...
பிரிவு நேர்ந்திடாத நிமிடம்
வேண்டி அன்பும்
இங்கு ஆர்பரிக்குமே...
புரிதல் கொண்ட வாழ்க்கைவாழ
காதல் இங்கு தியாகம்
இரங்கிடுமே...
மனதில் மழை சாரல்
தினமும் வந்தால் காதல்
கனிந்து கற்பினித்திடுமே...
வெறுக்கும் வேட்கை நெஞ்சை
சூழ்ந்தால் கசக்கும் கற்பு
வாழ்வை அழித்திடுமே...
நெஞ்சில் காதல் மழை தினமும்
கொண்டு சொர்க்கம் காணும்
கற்பை போற்றிடுவோம்...!!
....கவிபாரதி...