பேரறி வாளர் துணிவு - ஆசாரக் கோவை 19
காலினீர் நீங்காமை யுண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை யேறற்க வென்பதே
பேரறி வாளர் துணிவு. 19 ஆசாரக் கோவை
பொருளுரை:
கால்களைக் கழுவிய நீரின் ஈரம் காய்வதற்கு முன் உண்ணத் தொடங்க வேண்டும்.
கால் கழுவிய ஈரம் காய்வதற்கு முன் படுக்கையில் ஏறிப் படுக்கக் கூடாது என்பது பெரும் அறிவுடையவர் களின் அறிவார்ந்த கொள்கையாகும்.