பெண் அவள் ஈடில்லா பொக்கிஷம்
"பூஞ்சோலை''
தழுவிடும் அழகு..
--பெண்ணவளின்--
வெட்கம் சுமந்திட..!
ரசித்திடும் ஆர்வம்
நம்மில் தினம் தினம்
பேராசை கொள்ளுமே..!
''வைரங்களின்''
சல்லடை ஒலியில்..
--பெண்ணவளின்--
புன்னகை பூத்திட...!
மகிழ்ச்சியில் நிலைத்திட
நம்மனது சொல்லிடை
மிளிரும் சங்கீதம் தேடிடுமே..!
''வானிலவு''
பொன்னருவி குளித்திட..
--பெண்ணவளின்--
முகத்தில் மூழ்கிட.!
ஜொலிக்கும் பேரழகில்
நம் கண்ணிருமணிகள்
காதல் காவியம் படைத்திடுமே..!
''சொர்க்கத்தின்''
சாயலான இன்பம்..
--பெண்ணவளின்--
அன்பில் கிடைத்திட..!
எமன் துரத்திடும்
உயிரும் அன்பினில்
உயிர்த்திட விதி வென்றிடுமே..!
''அட்சயபாத்திரம்''
அமுதம் மிஞ்சிட
--பெண்ணவளின்--
கற்பு புனிதம் கொண்டிட..!
வளங்கள் நிறைந்ததோர்
இந்திய தாய்திரு நாடும்
பெருமை பெற்றுடுமே...!
''தாயாக''
இரக்கம் பகிர்ந்திட
--பெண்ணவளின்--
பொறுமை தியாகம் ஈன்றிட...!
பெண்ணினமே
பூமி வந்த இறைஅருளின்
தரிசனமே....!!!
..கவிபாரதி..