மனமே மயங்காதே

மனமே மயங்காதே ஒரு மாற்றம் உருவாகும் !

கனவே காணாத பொன் உலகம் உருவாகும் !

சங்கே அடங்காதே ஒரு சங்கமே உருவாகும் !

எங்கே மதிக்காத பொன் தங்கமே விலையாகும் !

போக போக வேக நெஞ்சம் விவேகமாகும் !

பழகப் பழக பாரமனமும் பலமாகும் !

போராடி போராடி வாழ்வு ஓர் தேரோட்டம் !

கல்லடி பல்லடி சொல்லுக்கு ஏன் இந்த ஆட்டம் !

மனமே சற்று நில்லு !

தினமே ஒரு சொல்லு !

இந்த காலம் நிற்காது ?

சொந்தம் பந்தம் நிலைக்காது ?

தேடல் நேரம் தேயிந்திடம் !

கடல் தினமும் படகு தேடும் ?

போன நேரம் நிலைக்காதா ?

ஏன் இந்த காலம் நிலையான பாதம்

காட்ட வில்லை ?

கண் திறந்த நேரம் பலமான பாலம்

கட்ட வில்லை ?

என்று நினைத்து நினைத்து உன் கனவை

கண்ணாடி சிலைப் போல் உடைத்து பொன்

மனதை சிதறிவிடாதே !

எதிரிகளை எதிர்த்து நின்றால் காலமோ

நம்மைப் புகழும் !

உழைப்போ உழைத்து வென்றால் புகழோ

நம்மைச் சேரும் !

எழுதியவர் : கவிஞர் வேதா (10-May-14, 1:23 pm)
பார்வை : 204

மேலே