குற்ற உணர்வு
தோலிலே தனது சால்வையை போட்டபடி வயற்காட்டு வரம்பால் சிந்தனை செய்தபடி நடந்து சென்று கொண்டிருந்தான் வேலாயுதம்.
படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது நோயாளி மனைவி.வயசுக்கு வந்திட்ட இரண்டு மகள்மார்,கடைக்குட்டி செல்வம்.
படிப்பை முடித்துவிட்டு காத்திருக்கும் மகள்மாருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்யும் வயசு.அதற்காக அவன் சேமித்து வைத்ததெல்லாம் ஒரு சிறிய மண் குடிசைமட்டும்தான்.
தூரத்து உறவு சொந்தம் ஒன்று பக்கத்து ஊரில் வசிக்கிறது,அங்கு திருமண வயதில் ஒரு ஆண்பிள்ளை இருப்பதை கேள்வியுற்று அங்கு சென்றுதான் திரும்பிக்கொண்டிருந்தான்.
படிக்கட்டில் அமர்ந்து தனது தந்தை வரவுக்காக காத்திருந்த மூத்த மகள் தந்தை வருவதைக் கண்டு ஆவலுடன்.நல்ல செய்திக்காக.வீட்டு வாயிலுக்கு வந்த தந்தையிடம் நீர் நிரைந்த செம்பை கொடுத்துவிட்டு தந்தை முகத்தை பார்த்தவளுக்கு முடிவு என்னவென்று தெரிந்துவிட்டது.பாவம் அவள் ஏமாற்றத்துடன் கொள்ளைப் பக்கம் போய் ஊமையாய் அழுதாள்.
படுக்கையில் இருந்தபடியே மனைவி, போன விசயம் என்னவாச்சி, ஒரு எதிர்பார்ப்புடன் கணவனை பார்த்து ஒரு முனகலுடன் கேட்டாள்.பார்ப்போம் எல்லாம் கை கூடும் என்று சொரனையே இல்லாமல் கூறிவிட்டு வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டான்.
மாப்பிள்ளையின் அம்மா, கோபிக்கக் கூடாது நாங்களும் மிகவும் கஸ்டத்துலதான் இருக்கோம்.அவனை நம்பித்தான் இந்தக் குடும்பமும் வாழுது.அவருக்கும் வயது போய்ட்டுது.அவனை இப்ப கட்டி வச்சா எங்க குடும்பம் என்னாகிறது.அது மட்டுமில்லாம உங்கட நிலைமையும் மிச்சம் மோசமாக்கிடக்குது.இந்த நிலையில அவனை ஒங்கட மகளுக்கு தர முடியாது கோபிக்காதைங்கோ,என்று ஒரே அடியாய் மறுத்துவிட்டார் அந்தப் பெண்.
வீட்டு முகட்டையே வெறித்து பார்த்தபடி வேலாயுதன் சிந்தனையில் மூழ்கிருந்த வேளை அவனைது சிந்தனைக்கு முட்டுக்கட்டை இட்டதுபோல் மகனின் குரல் கேட்டு இவ்வுலகிற்குத் திரும்பினான்.
அப்பா பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போகப் போறன்.எனது சினேகிதர்கள் அழைக்கிறார்கள் போகட்டா என அப்பாவிடம் கேட்டான் வேலாயுதத்தின் மகன் செல்வம்.
அவனின் வருமை, போக வேண்டாம் என சொல்ல முடியவில்லை.தந்தையின் மௌனம் சம்மதம் என எடுத்தவனாக அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றான்.
வேலாயுதன் ஒரு குற்ற உணர்வில் கையாளாகதவனைப் போல் கூனிக் குறுகி தனது வருமையை நொந்தவனாக மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.