சியாஹ்
17 வயது என்பது நமது வாழ்கையில் ஒரு முக்கியமான பகுதி...
17 வயதில்தான் நமது வாழ்கை மாறும்.பெற்றோர்களை விட்டு வழ தொடங்குவோம்.
இந்த கதையில் சியாஹ்வின் வாழ்கையை பற்றி தெரிந்துகொள்ள போகிறீர்கள்.
சியாஹ் ஒரு அழகிய பெண்,அவள் கூச்ச சுபாவம் கொண்டவள் மற்றும் ஆண்களிடம் பேச மிகவும் தயங்குவாள்.அனால் ஹசீ அப்படியல்ல.அவள் மிகவும் தயிர்யமனவள்.அவளுக்கு 19 வயது.சியஹ்வின் அத்தை மகள்.
சியாஹ்விர்க்கு ஆடை வடிவமைப்பதில் மிகுந்த ஆர்வம்.அவள் ஆடை வடிவமைப்பாளராக ஆகா வேண்டும் என்பதுதான் ஆசை,கனவு,லட்சியம்.
அனால் ஹசீயொ புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினால்.
இருவரும் தங்கள் கனவை அடைய அமெரிக்க செல்கின்றனர்.
அங்கேதான் எல்லாம் நடக்கிறது.....
சிலு சிலுவென தென்றல் என்னை தழுவ நான் அந்த கட்டையில் அமர்திருந்தேன்.புகைவண்டி நிலையத்திற்கு நேரத்திற்கு வந்துவிட்டேன்.அனால் வண்டியை காணவில்லை.எனவே முகத்தை சுளித்த படி கைகடிகரத்தை பார்த்தேன்.அப்போதுதான் தெரிந்தது நேரம் 4 மணி என்று.வண்டி வர இரண்டு மணி நேரம் உள்ளது என
ஞாபகம் வந்தது.
எனது மனம் குழம்பியது.கேள்விகள் பல மனதில் எழுந்தன.யாரோ தெரியாத பெண் கொடுத்த பயனசிட்டினை வைத்துகொண்டு இங்கே எப்படி வந்தேன் என்று.
நகைச்சுவையாக இருக்கிறதா?இல்லை படத்தில் வருவது போல் உள்ளதா??என்று எனது மனம் என்னையே கேட்டுகொண்டது.
எனது மனம் நேற்று இரவில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றது.
"இந்த பெரிய பாலத்தின் உச்சியில் இப்போது நின்று கொண்டிருக்கிறேன்.ஏன் என்னால் ஏதும் சாதிக்க முடியவில்லை.தோல்வியை மட்டும் சந்தித்த நான் இப்போது வெற்றியை சந்திக்க போறேன்.ஆம் நான் சாவோடு ஜெய்க்க போறேன்.என்னை தேடி வரும் சாவை தேடி நான் போக போறேன்...",என்று உரக்க கத்தினேன்.
எனது கண்ணிற் துளி கீழே ஓடி கொண்டிருக்கும் ஆறில் கரைந்து காணமல் போனது.நானும் அதில் விழுந்து நிரந்தரமாக காணமல் போக வேண்டும் என்று நினது கொண்டேன்.
திடிரென ஒரு சத்தம்.திடுக்கிட்ட நான் கால் தவறி கிழே தடுமாறினேன்.