காதல் சோதிடர்

இளைஞர்களே...! யுவதிகளே ....!
இந்த மாதங்களை நீங்கள் காதலித்தால் ....!
நடக்கப் போவது இதுதான் ....!
தை மாதம் : தை பிறந்தால் "வலி" பிறக்கும் நீ
காதலிக்காவிட்டால் "வழி" பிறக்கும் ...!
மாசி மாதம் : தூசிமாதிரி தட்டிட்டு போயிடுவர் ..!
பங்குனி மாதம் : பணம் புடுங்கும் வரை காதல் தொடரும் ...!
சித்திரை மாதம் : நித்திரையை கெடுத்திடுவர்..!
வைகாசி மாதம் : வைத்தியாசாலைக்கு அனுப்பாமல் விடமாட்டார்கள் ...!
ஆனிமாதம் ; போ நீ என்று போயிடுவர்..!
ஆடி மாதம் : ஓடியே போயிடுவர் ...!
ஆவணி மாதம் : தாவணி கனவை தந்துகொண்டிருப்பர்...!
புரட்டாதி மாதம் : புரட்டி புரட்டி அடிப்பார்கள் ...!
ஐப்பசி மாதம் :ஐயோ..நான் பிசி என்று ஒடிடுவர்...! ..!
கார்த்திகை மாதம் : காத்திருக்க வைத்து கழுத்தறுப்பர் ...!
மார்கழி மாதம் ; நீ ஒரு மார்க்கமாக இருக்கிறாய் என்று ஓடிடுவர்...!
( அப்போ எப்பதான் காதலிப்பது..? -அடுத்த சோதிடத்தில் )