எறும்பு
வரிசையில் சென்றவனை
வம்பிழுத்து மிதிக்கிறான்
குசும்பு மனிதன்...
----------------------------------------------------------------------------
பசியினில்
சிந்தியிருந்த பருக்கை தின்றேன்
என்னவள் துப்பிய பருக்கைக்கு
எரும்புகள் சண்டையென
கதை கட்டினான் கற்பனைவாதி...
----------------------------------------------------------------------------
தத்தித் தத்தி
பிடித்தேன் இலைப் பயணம்
தகர்த்தது தவளையின் தனிகுணம்
----------------------------------------------------------------------------
சுவற்றில் பல்லியுடன்
ஆடுபுலி ஆட்டம்...
----------------------------------------------------------------------------
சிறுவர்களுடன் மணலில்
கண்ணாமூச்சி ஆட்டம் -
ஆட்டம் முடிந்தது
மண்ணிலே எனதாட்டமும் முடிந்தது...
----------------------------------------------------------------------------
விரும்பித் தின்றேன்
வெயிலின் சாவு...
----------------------------------------------------------------------------
வாயினுள் தெரியாமல் நுழைந்தேன்
நாற வாயன்
நஞ்சென
குப்பையில் துப்பினான்
தப்பியது நான்...
----------------------------------------------------------------------------
நுழையாத சேலையிலும் நுழைந்தேன்
சிலர் கற்பனையின் உச்சத்தில்...
----------------------------------------------------------------------------
மழலையின் கையில் சரிந்தேன்
நசுக்கப்பட்டேன் அம்மாவின் பாசத்தில்...