உன் மரணதிற்குள்ளாவது மறந்துவிடு என்னை 555

அன்பே...

நீயும் நானும் கைகோர்த்த
நம் நினைவுகள்...

இன்னும் என்னில்
மறையவில்லை...

உன்னிலும் என் நினைவுகள்
மறைந்திருகாது...

நாம் ரசித்த மாலை
நேர சூரியன்...

மழைகால வானவில்...

கைகளில் ஏந்திய
மழைத்துளி...

ஏதேனும் ஓர்
மூலையில்...

அவ்வபோது என் நினைவுகள்
வந்து செல்லும்...

கூட்ட நெரிசலில் யாரேனும்
என் பெயரை உச்சரிக்க கேட்டால்...

அந்த கணம்
செவிடாகி விடு...

தொலை தூர
பயணத்தில்...

என் சாயலில்
யாரேனும் கண்டால்...

அந்த கணம்
குருடாகிவிடு...

உனக்கு செல்ல
பெயர் நானும்...

எனக்கு செல்ல பெயர்
நீயும் வைத்தது போல...

உன் மழலைக்கும் என்
பெயர் வைத்துவிடாதே...

நம் நினைவுகளை
மறக்க கற்றுகொள்...

முடிந்தால் உன் மரணதிற்குள்ளாவது
மறந்துவிடு என்னை...

உன் நலம் விரும்பும்
அன்றைய உன்னவன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (26-May-14, 3:54 pm)
பார்வை : 323

மேலே