​​நறுமணம் கமழும் ​நந்தவனம் ​​

​​நறுமணம் கமழும் ​நந்தவனம் ​​
​கரங்களில் ஏந்துது மலர்வனம் ​
​விழிகளில் தெரியுது சுகவனம் !

புன்னகை பூக்குது சிறுமலர்
பொன்னகை சூடிய நறுமலர்
குறுநகை தவழ் குறிஞ்சிமலர் !

முத்துக்கள் சிதறும் முகபாவம்
துளியும் இல்லை அகம்பாவம்
இவ்வழகின் முன் ரதிதான் பாவம் !

பார்வையில் தெரியுது அபிநயம்
பார்வைக்கு தெரியுது சிற்பநயம்
படமோ இணையதளத்தின் உபயம் !

மிளிரும் தளிரிவள் தங்கச்சிலை
ஒளிரும் வையத்தில் வைரச்சிலை
குளிரும் நிலவொளியில் பளிங்குசிலை !

கொஞ்சும் அழகோ தஞ்சமிங்கே
சொல்லிட குறையும் பஞ்சமிங்கே
வாழ்த்திடும் அளவிலா நெஞ்சமிங்கே !

அழகாய் பிறந்திட்ட ஓவியமன்றோ
அழகிற்கே அழகு அலங்காரமன்றோ
அழகின் அடையாள சின்னமன்றோ !

பூந்தோட்டம் பூரிக்குது புதுதென்றலாய்
பூமகளோ பூகோளத்தின் பூக்கோலம் .
பூபாள ராகத்தின் புத்தம் புதுவடிவம் !

( உபயம் = காணிக்கை )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-May-14, 3:17 pm)
பார்வை : 836

மேலே