தனிமையின் காதலி
கண்ணை கட்டி கொண்டு
விளையாடும் குழந்தை
நான் இல்லை.
என் கண் முன்னே நடக்கும்
காட்சிகள்
எல்லாம்
நடக்கவே இல்லை என்று கூறி
என்னை ஏமாற்றி விட்டாய்.
இனியும் என்னிடம் இழக்க எதுவும் இல்லை.
என்னை விட்டு விடு.
நீ சொல்லும் பொய்கள்
பொய் என்று தெரிந்து
உன்னை இழக்க முடியாமல்
நான் தவிக்கிறேன்.
ஆனோ
நீயோ
என்னை பைத்தியகாரி
ஆகி விட்டாய்.
போதும்
உன் பாசம் என்னும்
பொய்களை
கொண்டு என்னை தாங்கியது.
இனி
நான் என்றும்
தனிமையின் காதலி.........