ஆக்கமது கைவிடேல்

திரி நுனி தீய்ந்தபின்பே..
சுடரது ஒளி வளர்க்கும்,

செங்கதிரால் விரிந்து
விரவும் தாமரையோ
பொய்கை நீரின்மிகுதியால்
அமிழ்ந்து விடுவதில்லை

கதிரவன் கிரணம் கண்ட
மண்ணெல்லாம் வளம்
பெறத்தவறுவதில்லை

இயற்கை இயக்கம் ஒத்த
வாழ்வே அமைதி ஆனந்தம்
நழுவ விடுதலில்லை

ஆக்கமதுவே பயன்நிலை.
அதன் பயனுள் இழை.

எழுதியவர் : மின்கவி (30-May-14, 9:33 pm)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 171

மேலே