நரசிம்மர் ஹிரண்யன் வயிற்றைக் கிழித்தது போல - நேரிசை ஆசிரியப்பா

எனது மனைவியின் தண்டு வடத்தில்
’எபிட்யூரல்’ ஊசி போட்ட மயக்க
டாக்டர் கல்யாண சுந்தரம் மெதுவாக
எட்டு இடத்தில் இடுப்பில் ஊசியால்
குத்திப் பார்த்து வலிக்கிறதா என்று
பக்குவமாய்ப் பலமுறை கேட்டு விட்டார்!
பார்த்திருந்த நானோ தப்பேதும் செய்யாத
பண்புள்ள மகளவளை நானே குத்திக்
காட்டுவ தில்லை; ஏனிந்தத் துயரம்?
என்றேன்; ’ஸ்பைனல்’ ஊசி போட்டு
வயிற்றுப் பகுதி மரத்த பின்னே
அறுவை சிகிச்சை டாக்டர் ராஜாவும்
என்மனைவி விழித்திருக்க, நரசிம்மர் அவதாரம்
ஹிரண்யன் வயிற்றைக் கிழித்தது போல,
அவள்வயிற்றைக் கிழித்து, குடலை உள்ளே
தள்ளி ஹெர்னியாவை சரிசெய்து ’டெஃப்லான்
மெஷ்’சும் வைத்துத் தைத்து, வெளிப்புறமும்
'கிளிப்'போட்டுத் தைத்து விட்டார்! ஊசியைப்
போட்டாலும், கத்தியால் அறுத்தாலும் நன்மையே
பயக்குமென நன்றி சொல்லி
மௌனமாய் நானும் மகிழ்ந்திருந் தேனே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-May-14, 10:07 pm)
பார்வை : 246

மேலே