அறியா பிஞ்சுகள்

சிறகடிக்கும் நேரத்தில்
சிக்கிக் கிடக்கும் சிறும்பிஞ்சுகள்
சிகரங்களை தொடும் வயதில்
சின்னா பின்னமாய் அவர்களின் நிலை
பணத்திற்காக ஏங்கும் கயவர்களின் மத்தியில்
பாசத்திற்காக ஏங்கும் அவர்களின் மனம்
படிக்கும் வயதில்
படி கட்டும் வயதவராய் அவர்கள்
இறைவா உன்னருளால்
கிடைத்தது வெளிச்சம் (விடுதலை)
இவ்வுலகிற்கு
இன்னும் இல்லை
அவர்களின் வாழ்விற்கு
அறியா வயதில்
அவதிப் படுகிறார்களே
ஒளிரட்டும் அவர்களின்
வாழ்க்கை
விடியல் எப்பொழுது............

எழுதியவர் : சைனுல் (31-May-14, 9:06 am)
பார்வை : 78

மேலே