உன் மூலம்

நிலவையும் பூக்களையும்
ரசிக்க தொடங்கினேன்,
என் உடம்புக்குள் உற்சாக ரத்தம் ஊறியது,
தேங்கி கிடந்த நான்
திடீரென்று பாய ஆரம்பித்தேன்,
எனக்குள்
ஒரு கவிஞன் உருவானான்.
உன் கால் கொலுசின் ஓசைக்கு
என் காதுகளை அடகு வைத்தேன்.
என் மனதை தூசு தட்டியவளே,
என்னை சூனியத்தில் சுற்றியவளே,
என் மீது அமுதாய் விழுந்த வெயிலே
காரணமின்றி
சுவாசிப்பதை போலவே
காரணமின்றி
உன்னை நினைத்து கொண்டிருக்கிறேன்.
உன்னை மட்டுமே
நினைத்து கொண்டிருக்கிறேன்.
மௌனத்திற்கு
வலி உண்டென்றும்
பார்வைக்கு
காந்தசக்தி உண்டென்றும்
உணர்ந்து கொண்டேன்.
உன் முகம் வாடியதில்
என் கண்கள் ஈரமானது,
நீ பேசியதால் தானடீ
எனக்கும்
தமிழ் மீது
ஆசை வந்தது.
உன் பெயரை உச்சரித்தே
என் உதடுகள்
அமிர்தம் உண்டன.
எதார்தமாக திரிந்த
என்னை
கனவுகளின் மாடிக்கு
அழைத்து சென்றவளே,
என் இதய
தீ -க்கு
நெய் ஊற்றியவளே,
உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் உடம்பெங்கும்
ஒரு மின்சார பாய்வு.
உணவை மறந்து
உன் நினைவுகளை மட்டுமே வைத்து
பசியாருகிறேன்.
என்னை தவிர
எல்லோரையும் எழுப்ப
சூரியன் உதித்து விட்டது.
நான் இன்னும்
உன் நினைவிலிருந்து
மீளவில்லை
மீசை முளைத்த இளைஞர்கள்
பலர்
அடைந்த பாதிப்பை
இன்று நானும்
அடைந்து விட்டேன்.........

உன்மூலம்

- ராசி இல்லாதவன்

எழுதியவர் : ராசி இல்லாதவன் (31-May-14, 11:44 am)
சேர்த்தது : Raasi illadhavan
Tanglish : un moolam
பார்வை : 79

மேலே