அறியாமை அறிவுதானே
சிறைக் குள்ளே
நீ ஏன் தங்கியுள்ளாய்...!
அறைக் கதவு முழுவதும்
திறந்துள்ள போது ?
முக்கோணப் பயத்தில்
முடங்காது நீ வெளிச் செல்...!
சிந்தித்து
மௌனமாய் வாழ்ந்திடு...!
இரு கண்களை மூடிக் கொள்
மறு கண்ணால் நீ பார்த்திட...!
கரங்களை விரித்திடு
கைகளைக் குலுக்க வரும் போது...!
இந்த வட்டத்தில்
நீ வந்து உட்கார்...!
ஓநாய் போல்
நடிப்பதைத் தவிர்த்திடு...!
ஆட்டிடையன் பரிவு
உள்ளத்தில் நிரம்புவதை உணர்ந்திடு...!