கேள்வி குறி

பிள்ளையார் சுழி போட்டு
ஆரம்பித்த வாழ்க்கைக்கு
ஆச்சிரிய குறியாய்
கொஞ்சகாலம் காதலியாய்
நடிக்க சொன்னான் அவளை...
நம்பி விட்டேன் நானும்...
கூடவே கேள்வி குறி
ஒன்றையும் வைத்தான் கடவுள்
முற்று புள்ளியை
நீ வைக்கின்றாயா? இல்லை
நான் வைக்கட்டுமா என்று...

நான் சாவுக்கு பயந்த
ஒன்றும் கோழையில்லையே...

எழுதியவர் : (9-Jun-14, 6:07 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : kelvi kuri
பார்வை : 198

மேலே