நான் காணும் உலகில்

என் உலகில்
நிலைகொண்ட
பளிங்காய் பாதிநிலா..
அதில் அனுதினம்
உலா வந்திடும்
அழகிய தேவதை..
அவள் கைகளில்
இதழ் கொஞ்சிடும்
மெருகேறிய புல்லாங்குழல்..
இவை யாவும்
என் இரவில்..
மனக்கண் தூங்க
மையல் தூவிடும்..
மிதமான இருளோடு
மெய் சிலிர்க்கும்
பனி பொழிந்து..
இதமான தென்றலாய்
கீதம் பாடி..
அங்கு நான் உணர்கிறேன்..
சமத்துவ பூமியில் வாழ்வதை..!!
...கவிபாரதி.

எழுதியவர் : கவிபாரதி (13-Jun-14, 9:18 pm)
Tanglish : naan kaanum ulagil
பார்வை : 107

மேலே