நீளுகின்ற மரணத்துளிகள்

எங்கே துக்கம்
மிகுந்து நிம்மதி
தொலைந்து போகிறாதோ
அந்த ராத்திரியின்
மணித்துளிகள் மரணத்தை
நோக்கி உன்னை
அழைத்தபடியே
இருக்கும்!

சயனப் பண்டங்கள்
முகாரி ராகமிசைத்து
காது மடல்களுக்குள்
வண்டுகளின்
குடைச்சல் போல்
ஒப்பாரிக் குலவைகள்
ஓலமிட்டு
ஒற்றையடிப் பாதையில்
பாடையோன்று
பல்லக்கில் ஏறி
வரும்!

நீளுகின்ற மரணத்துளிகள்
ஒவ்வொன்றும்
யுகக் கடத்தலாய்!
ஆமைக்கும் முயலுக்கும்
பந்தயத்தின்
ஓட்டம் போல்
இருதயமும் கடிகாரமும்
மாறி மாறி
ஒலியெழுப்பும்!

மரணிக்க முயலும்
கடைசி நிமிடமொன்றில்
தூக்கம் கண்களின்
இமைகளைத் தழுவி
விட்டுச் செல்லும்!
அசைந்து திரும்பி
மெல்ல ஒருக்கழித்து
தலையணையொன்றை
அடைகொடுத்து
திரும்பிப் படுக்கையில்
வாசலில் கேட்கும்
மணியோசை
அம்மா பால்!

..................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (18-Jun-14, 10:28 pm)
பார்வை : 756

மேலே