சௌபாக்கியம்

சிறியதோர் திரி போட்டு
விளக்கேற்றி

சிறந்ததோர் வழிபாட்டினை
சொல்லி

மூத்தவர் வழிபடுவது
அனுதினமும்,

வீட்டிலே சௌபாக்கியம் நிலவட்டும்
என்ற எண்ணத்தினாலே

நம்பிக்கை என்பது விவாதத்திற்குரிய
ஒன்று,

நம்பினாலும், இல்லை எனும்
இளையவர்களே

நீங்கள் பின்பற்றுங்கள் உங்கள்
மூத்தவரை வழிபாடுகளிலே

காணுங்கள் உங்கள் வாழ்வினில்
நிம்மதில் நிலவுவதை

இதை நான் எந்தன் அனுபவத்தில்
அறிந்ததினால் சொல்லுகின்றேன்

எந்தன் மூத்தவர் சொல்லி தந்த
வழிபாடுகளை இன்றும் நான்
வழிபட்டு,

அதன் இனிமையை வாழ்வில்
அனுபவிப்பதினால் சொல்லுகின்றேன்

சொல்வதற்கு நான் தயங்கவில்லை
சொன்னதை செய்வதற்கு யார்
தயங்கினாலும்,

யார் என்னை விமரிசித்தாலும்
எனக்கு கவலை இல்லை

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (20-Jun-14, 6:05 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 70

மேலே