சிட்டு குருவிகள் பேசிய கதை என்னவோ
சிட்டு குருவிகள் இரண்டு
மரக்கிளையில் அமர்ந்து
சொன்ன கதை ஒன்றுக்கொன்று
என்னவோ?
பூங்காவில் இரு காதலர்கள்
அன்பு பிணைப்பினில், தங்களை
மறந்து பிணைந்திருப்பதை
பற்றியதோ?
அதனருகிலே இருக்கும் சறுக்கும்
மரத்தில் சறுங்கி விளையாடிய
இரு சிறுவர்களை பற்றியதோ?
அரசியல் விவாதத்தில் ஆழ்ந்து
ஈடு பட்டு அடிக்கும் விதத்தில்
பேசிகொண்டிருக்கும் இரு
ஆண்களை பற்றியோ?
இல்லை ஒரு கிழவி மலாம்பழ
கொட்டைகளை அளந்து விற்று
கொண்டிருந்தாளே, அதை பற்றியோ?
நிச்சயமாக மலாம்பழ கொட்டைகளை
பற்றியதாக தான் இருக்கும்
அதன் உணவினை பற்றிய கவலை
அதற்க்கு
மற்ற ஊர் கதைகள் அதற்கெதற்கு?