உன்னை எனக்கு தெரியுமா

உன்னை எனக்கு தெரியுமா?
ஏய் உதய சூரியனே...!

விடிகாலையில் நீ எட்டி பார்க்கும்
நேரம் நான் உறக்கத்தில்

அதிகாலைகள் எல்லாமே கழியுது
கிறக்கத்தில்

அஸ்தமனத்தின் பின்னர் என்
எழுகைகள்

நீ உதிக்கும் முன்னே என்
நித்திரைகள்

என்னை நீ அறிந்திருப்பாய்
போதையில் உறங்குவதை
சன்னல் வழியே பார்த்திருப்பாய்

பேதை இவன் என்று கொஞ்சம்
ஏமாற்றம் கொண்டிருப்பாய்

உன்னை நான் அறியவில்லை
உதயம் நான் கண்டதில்லை

ஊருக்கு நான் உபயோகமில்லை
வீட்டிற்கு நான் உதவியதில்லை

போதையை நான் விடுவதிற்கில்லை
பேதை என்று நீ ஏளனம் செய்தாலுமே

மதுக்கடைகள் இங்கு இருக்கும் வரையிலே,
மற்றவர் நினைப்பினை பற்றி எனக்கு
கவலையில்லை

என்னை உனக்கு தெரியும்
உன்னை எனக்கு தெரியுமா?

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (21-Jun-14, 6:27 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 49

மேலே