போற்ற தக்க பேர்வழி

போற்ற தக்க பேர்வழி ,

பார்க்கின்றான் என்னை
பல மாதிரி...!

கண்ணடித்து சிரிக்கின்றான்
ஒரு மாதிரி....!

கை தொட்டு அழைக்கின்றான்
அர்த்த ராத்திரி

மார்பினை முட்டி கேட்கின்றான்
அவன் பசி தீர்க்கும் படி

கால் உதைத்து அழுகின்றான்
அடம் பிடித்த படி

கடிக்கின்றான் எந்தன்
மார்பினை மலங்க, மலங்க
விழித்தபடி

எட்டி உதிக்கின்றான் எந்தன்
வயிற்றினையே

இவன் எந்தன் கருவில்
உதித்த பேர்வழி

நாளும், நான் ரசிக்கும்
இவன் ஒரு மாதிரி

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (21-Jun-14, 6:49 am)
பார்வை : 55

மேலே