பொய்த்ததும் , பெய்ததும்

ஈசான திக்கில் இருண்டகார் மேகமும்
பாசாங்கு காட்டியே பையநீங்க -பேசாத
காற்றும் சுழன்று கலைத்திட, மண்மிசை
போற்றிய வான்மழை பொய்த்து .

வெட்டிடும் மின்னலும் விண்ணில் இடியுடன்
கொட்டும் மழையும் குளிர்விக்கும் -பெட்டிக்குள்
பாம்பாய் முடங்காது பெண்ணேநீ வாயார
சோம்பலின்றி நற்கவி சொல் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Jun-14, 10:06 pm)
பார்வை : 563

மேலே