நிஜம்
தேடல்.............
தேடலின் மறுபுறம் வாடல்
திரும்பாமல் தேடு சிந்தனையோடு...
நிழல்...............
ஒட்டிப்பிறக்காத உடன்பிறப்பு
இறுதிவரை இடுகாடு வருவது
இவன் சிறப்பு....
அன்பு..........
கிடைத்தவர்க்கு லாபம்
கிடைக்காதவர்க்கு சோகம்...
மழை...........
உப்பிட்டவரை உள்ளளவு நினை
என்பது குணம்
அதனால் வெகுளியாய் அழுகிறாள்
தினம்...
மொளனம்.........
ஆராய்ந்தும் சொல்லவில்லை விஞ்ஞானி
கடவுளையும் கடைந்துவிட்ட கடையாணி..
மரணம்....
ஆடி பாடி குடிகெட்டு சாகிறான்
பாடையில் தாடை கட்டி போகிறான்.