கனவுகளில் மட்டும்

நேரம் தவறாதியங்கும்
அரசு அலுவலங்கள்...!
குறித்த நேரத்தில்
நிறுத்தத்தில் வந்து சேரும்
மாநகர பேருந்து ...!

தெருகுழந்தைகளை
அள்ளிச் சென்று இலவச
கல்விபயிலச் செய்யும்
தனியார் பள்ளிகள்...!

பண்பாடு ஒழுக்கம்
மதிப்பெண் அடிப்படையில்
பணி ஒதுக்கிடும்
பரந்த அரசாங்கம்...!

சுகாதார கேடுகளை
சரிசெய்ய சுத்திகரித்த குடிநீர்
குப்பையை சாலையில்
சிந்திய குடிமக்களை
கைது செய்து ஒருமாதம்
குப்பைமேட்டில் சிறைவாசம்!!

வாகன நெருக்கடி குறைத்திட
ஒரு வீட்டிற்கு ஒரு கார் ,பைக்
வைத்திருக்க மட்டுமே அனுமதி!
அதை மீறும் பட்சத்தில்
அபகரித்து இல்லாதவர்க்கு
வழங்கிடும் நல்லரசு !!

பெண்களுக்கு தனி பாதுகாப்பு
ஜோடியா சுற்றுவதை பார்த்தவுடன்
புகைப்படமெடுத்து முதலில்
பெற்றவர்க்கு அனுப்பப்படும் !!

சிறந்த படிப்பினை தந்தது போல்
தொழில் வளம் சிறக்கவும்
சில மாற்றங்கள் செய்கிறது !
அறிவிற்சிறந்த மாணவர்கள்
அயல்நாடு பணிக்கு செல்ல தடையாம் !!

இலவச கல்வி இங்கு பயின்றதால்
இந்தியா வளம் பெற பாடுபட வேண்டுமென
கடவுசீட்டு வழங்கிட மறுப்பு !

தீடீரென மழை பொழிய
முகங்கள் நடுங்கிட
விருட்டென எழுந்து விட்டேன் !

அட சீ அத்தனையும் கனவா1!
பெய்தது மழையல்ல
தூங்க மூஞ்சி என எனை திட்டி
குவளை தண்ணியின் தீர்த்தம் கொட்டி
இறைத்தது அன்னை - ஆனாலும்
எனக்கு மட்டும் இன்னும் விடியவே இல்லை !!

எழுதியவர் : கனகரத்தினம் (4-Jul-14, 8:33 am)
Tanglish : kanavugalil mattum
பார்வை : 182

மேலே