போடா லூசு

உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன்
எனக்காக ஒரே ஒரு
கவிதை கொடு!
என் சிந்தைக்குள்
நுழைந்து என்னென்னவோ
செய்கிறாய்!
ஏதேதோ விளையாட்டுக்கள்
புரிகிறாய்!
சொல்ல முடியா வித்தைகளால்
வியக்க வைக்கிறாய்!
அத்தனையும் எழுத நினைத்தேன்
வார்த்தையின்றி யாசிக்கிறேன்
உன்னிடம்!

எனக்காக சில வார்த்தைகளைக்
கோர்த்துத் தருகிறாயா?
சும்மா வேண்டாம்
கடனாகத்தான்!
அதை எப்பொழுது
கேட்டாலும் திருப்பித்தருகிறேன்
வார்த்தைகளாக அல்ல!
இதழ்பிரித்து ஒத்தடமிடும்
கவிதைகளாக!
உன் மாயாஜால வார்த்தைகளில்
ஒன்றையாவது தந்துவிடு
ஓராயிரம் வருடங்கள்
பாதுகாக்கிறேன்!

கற்பனைக் கனவில்
ஏர்ஒட்டி நாற்று நட்டு
களை பறித்து உரமிட்டு
கதிர் முற்றக் காத்திருந்து
அறுவடை செய்ய முடியுமா?
அத்தனையும் வீணாகும்
எண்ணத்தின் ஓட்டமும்
வாழ்வின் ஏங்கலும் !
அதனால் கற்பனைக் கனவில்
காண்பதெல்லாம் கவிதையாய்
வடித்துக் கொடு!
காசுபணமல்ல காரியமாய்
கூலி தருவேன்!

அட! போடா உன்னிடம்
கெஞ்சுவதற்குப் பதில்
சும்மாயிருக்கலாம் போல!
நீயும் வேண்டாம் உன் கவிதையும்
வேண்டாம்! புண்ணாக்குத்தின்னி!
கொஞ்சம் புளியங்கொட்டையும்
சேர்த்து அரைத்து வைக்கிறேன்!
நன்றாகத் தின்று விட்டு
தூங்கு! பக்கி...............!
பேசாதே கொன்று விடுவேன்
நான் கோபத்தில் இருக்கிறேன்!
போடா...........லூசு!
இதுதான் காதலா?

.....................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ்! (7-Jul-14, 11:37 am)
Tanglish : PODA loosu
பார்வை : 546

மேலே