செல் மனப் பேசி

அன்பே ஒரு கையால் உன்னையேந்தி
தொடு விரலால் உன்னை தழுவ
உலகம் மறைந்து போனதடி

என் கைப் பிடியில் நீ இருந்தும்
உன் காலடியில் நான் !!!

செவ்வகமான நிலவே
உன் முகமரியா பேதைகளும் உண்டோ
இப்பூவிதனியில்!!!

நித்திரை தொலைக்கும் உன் சத்தம்
உன்மேல் நான் கொண்ட பித்தம்
நிதமும் வாழ்வோடு யுத்தம் !!!

பூவியீர்ப்பில் உடலிருக்க
உலகயீர்ப்பில் நீயிருக்க
உண்யீர்ப்பில் நானிருப்பேன் !!!

காதலர்களின் கைப்பிள்ளையே
அவர்களின் காதுகளை விட்டு
ஏன் அகல்வதேயில்லை !!!

இதையத்தின் அருகில்
உனைவைத்துக் கேட்கிறேன்
நீயில்ல ஓர் உலகம்
என் நெஞ்சுக்குத் தாராயோ !!!

எழுதியவர் : உடுமலை கே.வி.சம்பத்குமார் (9-Jul-14, 2:56 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
Tanglish : sel manap pesi
பார்வை : 561

மேலே