-----இதுவும் வேண்டும் என் தோழா-----

அடித்து நொறுக்கு !
அடங்கும் வரை..


ஏனிந்த பாசம்
ஏகமாய் கேள் !


அன்பு பெறும்வரை
அதனிடம் அடங்காதே !


முன்னுக்குபின் கேள்விகளை
முரண்பாடாய் அள்ளி வீசு !


ஆணவம் கொள் !
அடக்கி அதனையாள..


எச்சரிக்கை விடு !
என்றாவது எப்போதாவது ..


கட்டுப்பாட்டில் இன்னும்
கச்சிதமாய் பிடி !


கங்கணம் கட்டி
கலங்கவும் விடாதே !


தடைகளும் போடு
தறிகெட்டு போகுமுன்


எளிதில் நம்பிவிட்டு
ஏமாந்து போகாதே !


வெளிக்கொணர் இன்னும்
மாற்றங்கள் உட்புகுத்தி..


தூரங்களாய் வை !
தவறுகள் தடைபட..


பெண்களை தெய்மாய்
கற்றுக் கொடு !


கனவு கலைத்து
கலைகள் கற்றுக்கொடு !


மார்க்கமாய் மன்னித்து
மிரட்டலும் விடு !


திருப்பியும் திருந்த
வாய்ப்பும் கொடு !


உன்னை முதலில்
உறுதியாய் நம்பிடச்செய் !


உன்னை இனி
ஒருபோதும் மீறாது !


உன் அலைபாயும்
அந்த மனது ...!


****************************************************************************************************

எழுதியவர் : நெல்லை பாரதி (15-Jul-14, 1:07 pm)
பார்வை : 76

மேலே