பூக்களும் பாக்களும்
பூக்கள் என்றாலே
பூச்சூடும் மங்கையரே
பூத்திடும் நினைவினில் ..
பூக்கள் என்றாலே
பூசைகள் செய்வதையும்
பூரிப்புடன் சொல்வர் சிலர் ..
பூக்கள் என்றாலே
பூத்திடும் பாக்களும்
பூவாய் யாத்திடும் புலவனுக்கு..
பூக்கள் என்றாலே
பூக்கும் புன்னகையும்
பூமியில் அனைவருக்கும் ..
பூக்கள் என்றாலே
பூ வாய் மலர்ந்திடுவர்
பூவையர் புவிதனிலே ..
பூக்களின் மணத்தால்
பூரிக்கும் உள்ளத்தால்
பூத்து குலுங்கும் நெஞ்சமும் ..
பூக்களின் வண்ணத்தால்
பூத்திடும் எண்ணங்கள்
பாக்களாய் பிறந்திடும் ..
பூக்களால் ஈர்த்திட்ட
பூப்போன்ற இதயங்கள்
பூரிப்புடன் ரசிக்கும் பாக்களை ..
பூக்களும் பாக்களும்
பூரிக்க வைத்திடுமே
பூமியில் எவரையுமே !
பழனி குமார்