எதிலிருக்கு மகிழ்ச்சி

அடித்துக்கொண்டால் வம்பு
பிடித்துக்கொண்டால் நட்பு
அணைத்துக்கொண்டால் காதல்
பிணைத்துக்கொண்டால் திருமணம்!

உயிரிருக்கும்வரைதான்
சாக்கடையின் நாற்றம்
உயிர்போனபின்னால்
எல்லாம் சந்தனவாசம்!

இப்படி இப்படித்தான் வாழ்க்கை
எப்படி எப்படியோ வழிகள்!
முறையும் வழியும் மகிழ்விக்கதான்
எதிரும் புதிரும் சேர்ந்திடத்தான்!

வசதியிலில்லை ஆனந்தம்
வாய்ப்புகளில்தான் ஆனந்தம்!
உண்பதிலில்லை மகிழ்ச்சி
உணர்வதில்தான் மகிழ்ச்சி!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (18-Jul-14, 10:30 am)
பார்வை : 228

மேலே