காதல் பறவை -- மணியன்

ஒரு
பட்டாம் பூச்சியின்
சிறகில் அமர்ந்து மனம்
எங்கெங்கோ பறக்கிறது . . . . .

புது
வண்ண நினைவுகள்
கண்ணில் தோன்றி
விண்மீனாய் மிளிர்கிறது . . . .

நல்ல
மலர்களின் நறுமணம்
மனதில் நுழைந்து
மறுமலர்ச்சி தருகிறது . . . . .

வேறு
உலகில் தவழ்ந்து
உயரே பறந்து
உயிரும் சிலிர்க்கிறது . .. . .

நான்
நேற்று வரை
நன்றாக இல்லையென
நாள் இது
கட்டியம் கூறுகிறது . . . . . .

உயிர்
கலந்த உறவு ஒன்று
உடலோடு கலந்து
உருகி நிறைகிறது . . . . .

நீல
வான மேகங்கள்
கானம் இசைத்து
கவிதை பொழிகிறது . . . . . .

கண்ணாடி
முன் நின்று
வடித்த கவிதைகள்
காவியமாய் விரிகிறது . . . . . .

பெண்ணே
உன்னைப் பார்த்த
உன்னத நொடிமுதல்
கனவுகள் இல்லா இரவுகள்
கணப்பொழுதும் இல்லை . . . . . .

இது
காதல் தந்த சுகம்
காற்றில் பறக்கும் இதம்
காண வேண்டிய தவம் . . . .


*-*-*-* *-*-*-* *-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (18-Jul-14, 8:32 pm)
பார்வை : 215

மேலே