காதல் பறவை -- மணியன்
ஒரு
பட்டாம் பூச்சியின்
சிறகில் அமர்ந்து மனம்
எங்கெங்கோ பறக்கிறது . . . . .
புது
வண்ண நினைவுகள்
கண்ணில் தோன்றி
விண்மீனாய் மிளிர்கிறது . . . .
நல்ல
மலர்களின் நறுமணம்
மனதில் நுழைந்து
மறுமலர்ச்சி தருகிறது . . . . .
வேறு
உலகில் தவழ்ந்து
உயரே பறந்து
உயிரும் சிலிர்க்கிறது . .. . .
நான்
நேற்று வரை
நன்றாக இல்லையென
நாள் இது
கட்டியம் கூறுகிறது . . . . . .
உயிர்
கலந்த உறவு ஒன்று
உடலோடு கலந்து
உருகி நிறைகிறது . . . . .
நீல
வான மேகங்கள்
கானம் இசைத்து
கவிதை பொழிகிறது . . . . . .
கண்ணாடி
முன் நின்று
வடித்த கவிதைகள்
காவியமாய் விரிகிறது . . . . . .
பெண்ணே
உன்னைப் பார்த்த
உன்னத நொடிமுதல்
கனவுகள் இல்லா இரவுகள்
கணப்பொழுதும் இல்லை . . . . . .
இது
காதல் தந்த சுகம்
காற்றில் பறக்கும் இதம்
காண வேண்டிய தவம் . . . .
*-*-*-* *-*-*-* *-*-*-*