நாளை எனது பிறந்த நாள்

நாளை எனது பிறந்த நாள்..
என தீர்மானிக்கப்பட்ட நாள்..
ஆம் எம் ஆசிரியர் பெருமக்களால்
எனது பிறந்த நாள் நிர்ணயிக்கப்பட்ட நாள்..

இன்றும் என் தாய் தந்தை
ஆடியில் பிறந்ததாய் மட்டுமே
ஆனந்தம் கொள்கின்றனர்
இந்த மாதம் உறுதியானது..

பிறந்து சாதித்ததை விட
இறக்குமுன் சாதிக்க வேண்டியது
இன்னுமாய் தலைக்கு மேல்..
தாகத்துடன் தாண்டவம் ஆடுகின்றது..

எளிமை என்னை வழி மொயர்ந்து
வலிமை என்னை வலுப் பெறச்செய்து
உட்கிரகித்து தியானம் கொள்கிறேன்
இறைவனின் அருள் இன்னுமாய் வேண்டுமென்று..

பிறந்த போது இருந்த உலகம்
பிரளமாய் மாறி இன்னும் முன்னேற்றம்
பிரபஞ்சம் சுழன்று பின்னுக்கு போவதில்லை
பிறப்பகளும் இறப்புகளும் இன்றுமாய் சமநிலை

என்றாவது ஒரு நாள் சாதிக்கப் போவதை
இன்று முதல் முயற்சி கொள்கிறேன்..
மாட்டு வண்டியில் பயணித்த நான்
மாபெரும் வானூர்தியிலும் உலாவுகிறேன்

என் பிறப்பு நிர்ணயித்த ஆசிரியர்களுக்கும்
முன்னதாக வாழ்த்திய உயர் உள்ளங்களுக்கும்
வாழ்த்தி கொண்டிருக்கும் இனிய நல்லுங்களுக்கும்
இருகரம் கூப்பி நன்றி நவி்ல்கிறேன்...

எழுதியவர் : நெல்லை பாரதி (29-Jul-14, 7:32 pm)
பார்வை : 76

மேலே