வறுமையின் வண்ணம்
வண்ணச் சித்திரங்கள் அழகழகாய்
வரைகிறார்கள் சிறுவர்கள் பள்ளியிலே !
வறுமை கோரச்சித்திரம் போடுகிறது
பல சிறுவர்களின் வாழ்வினிலே !
வாழ்வில் வண்ணச் சித்திரங்கள் இரண்டு
ஒன்று வளமை ; மற்றது வறுமை .
வறுமைக் கோடு எந்த வண்ணத்திலோ ?
~~~கல்பனா பாரதி~~~~