மண்ணில் தவழும் என் மடி மீன் --தாய்ப்பால் தினம் போட்டிக்கவிதை

.
.
.
மண்ணில் தவழும் என் மடி மீன்
கண்ணில் கசியும் என் விழி முன்


என் தாகத்திற்கும் தண்ணீர் இல்லை
என் குழந்தைக்கு தாய்ப் பாலும் இல்லை


மாடி வீட்டு பஞ்சு மெத்தை வேண்டாம்
மானங் காக்க மாட்டு கொட்டகை போதும்


வலியோடு வழி தேடுகிறேன் மரணத்திற்கும் தான்
விதியில்லா இந்த வீதியிலே வாழ இயலாமல்..

.
.
.
.
.
.

எழுதியவர் : பிரியா பாரதி (1-Aug-14, 2:59 pm)
பார்வை : 176

மேலே