விழிக்குள் ஈரம்

விளைவு நம்மை தொடும் நேரங்களில்
செயல்கள் நினைவு கொள்ளும்
பாதை மாறி விடும்
படுக்கை தனிமையாகும்
அவள் நினைவு நெஞ்சைத் தொடும்
அவள் சிரிப்பு உயிரைக் கொள்ளும்
அவள் வார்த்தை கண்ணில் விழும்
என் கண்கள் விம்பி அழும்
அவள் வருவாள்
என் கண் துடைப்பாள்
அவள் மடிசாய்ந்து
என் விழி ஆரும்.

எழுதியவர் : நா ராஜராஜன் (1-Aug-14, 5:14 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
பார்வை : 120

மேலே