நினைவெல்லாம் நீயாகவே

தொலைதூரந்தான் போகிறாள்,
தொலைந்து போகவில்லை....

அமைதி காக்க
மறுக்கும் மனத்துக்கான,
ஆறுதல்கள் இவை....

இதயத்தில் இலகுவாய்,
இறங்கி,
இறுக்க்கமானவளை,
இணக்கமானவளை,
இழக்கப் போகிறேன்,
பிரிவென்னும் பெயரால்...

பிரிவெல்லாம் கனவாகவே,
நினைவெல்லாம் நீயாகவே,
நித்தமும் துடிக்கிறேன்,
நிகரில்லா காதலால்...

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (1-Aug-14, 5:45 pm)
பார்வை : 60

மேலே