நினைவெல்லாம் நீயாகவே
தொலைதூரந்தான் போகிறாள்,
தொலைந்து போகவில்லை....
அமைதி காக்க
மறுக்கும் மனத்துக்கான,
ஆறுதல்கள் இவை....
இதயத்தில் இலகுவாய்,
இறங்கி,
இறுக்க்கமானவளை,
இணக்கமானவளை,
இழக்கப் போகிறேன்,
பிரிவென்னும் பெயரால்...
பிரிவெல்லாம் கனவாகவே,
நினைவெல்லாம் நீயாகவே,
நித்தமும் துடிக்கிறேன்,
நிகரில்லா காதலால்...