எதற்க்காக வாழ்க்கை

உனக்காக யாரும் இல்லை என நினைக்காதே !
பிறர்க்காக நீ வாழவேண்டும் அதற்காக
நீ பெருமை கொள் மனமே !

பிறப்பை தீர்மானிக்கும் உரிமை உனக்கில்லை
இறப்பை தேடி ஏன் அழைக்கிறாய் !
இறைவன் நினைப்பு மனதில் இருந்தால்
இரக்கமுடன் நீ இருக்க முனை !

பிறந்தும் பெற்றோர் அறியா உயிரிடத்து அன்பு கொள்
மானுடம் மட்டும் மண்ணில் தோழனள்ள
பிரிதுயிர் யாவுமே நல்லுறவே...!

தீண்டாமல் எவ்வுயிரும் எதிர்ப்பதில்லை
அதுபோல் நீ வாழும் வரை கடை பிடித்தால்
எதிரி என்பதே கிடையாது

உன்னை உயர்த்த பிறரின் மகிழ்வை அழிக்கும் போது
அங்கு பிறக்கும் முதல் பகை
அறிந்த மனம் மகிழ்வதில்லை !
தான் மகிழ்ந்து பிறரை வாட்டும் மனம் வாழ்வதில்லை!!

எழுதியவர் : கனகரத்தினம் (7-Aug-14, 12:44 pm)
பார்வை : 164

மேலே